Friday, 3 May 2019

துயரத்தில் கூப்பிட்டேன்

1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா - (2) குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் - (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே - (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர் இரவைப் பகலாக்கினீர் - (2) எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை - (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் - (2) 3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானையா - (2) தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானையா - (2) தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே - (2) 4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் - (2) புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் - (2) புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்

No comments:

Post a Comment